ஆதாரத்துடன் லிஸ்ட்.. வேலுமணியை தொடர்ந்து அடுத்து வசமாக சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Aug 17, 2021, 3:18 PM IST
Highlights

ஒட்டுமொத்தத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவர் குடும்பத்தினர் 2011 ல் வெறும் ரூ 7.48 கோடி சொத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சமாக ரூ 76.55 கோடி வருமானத்திற்கு மீறிய சொந்தை சட்ட விரோதமாக குவித்துள்ளனர். இதை சரியாக விசாரித்தால் மேலும் பல கோடி ரூபாய் வருமானத்திற்கு மீறிய சொத்து கண்டறிய வாய்ப்புள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது 76.75 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டுள்ளதாக, ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அளிக்கப்பட்டுள்ள புகாரில்;- முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி 2011 முதல் 2021 வரை பொது ஊழியராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில், தன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.55 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ளது.

 கே.சி.வீரமணி 2011 முதல் 2021 வரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் அவர் 2016 முதல் 2021 வரை வணிகவரித்துறை மற்றும் நிலப்பத்திரப்பதிவு அமைச்சராக இருந்தார். அதன் முன் 2013 முதல் 2016 வரை கல்வித்துறை விளையாட்டு துறை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் துறை மற்றும் சுகாதார துறை போன்ற துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். 2011ல் கே. சி வீரமணி அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள நிகர சொத்து ரூ. 7.48 கோடி என்று தெரிவித்திருந்தார். ஆனால் 2011 முதல் 2021 வரை அவர் மற்றும் அவர் குடும்பத்தார் வாங்கியுள்ள சொத்தின் மதிப்பு ரூ.91.2 கோடியாகும். 

கே.சி.வீரமணிக்கு 43,06,27,147 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் ரூ.15,74,35,980 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் வசமாகியுள்ளது. இதேபோல கே.ஏ.பழனி மற்றும் ஆர்.எஸ். கல்வி மற்றும் அறக்கட்டளை 92,21,593 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள், ஹோம் டிசைனர்ஸ் மற்றும் பேப்ரிகேட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டட் (ஹோட்டல் ஹில்ஸ்-ஒசூர்) 15,00,00,000, விபிஆர் ஹில் பிராப்பர்டிஸ், 7,10,00000 கோடி, திருப்பத்தூர் ஹோட்டல் ஹில்ஸ், 6,0000000 மதிப்புக்கு அசையா சொத்துக்கள், அகல்யா மற்றும் பத்மாசினி, 3,21,24,067 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் ரூ.15,90,700 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் ஆகியவற்றை புகார் பட்டியலில் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

2011 முதல் 2021 வரை அவர் வாங்கிய கடன்களை கழித்தால், அவர் சேர்த்த நிகர சொத்து ரூ. 83.65 கோடியாகும். மேலும் இந்த 10 ஆண்டு காலத்தில் அவரது வருமானம் மூலம் சேமிப்பு செய்தது அதிகபட்சமாக ரூ. 7 கோடி எனவே அவர் கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து ரூ. 76.65 கோடி ஆகும். இந்த சொத்தை கணக்கிடும் போது நாம் பெரும்பாலும் அவர் சொத்தை வாங்கிய விலையாக பதிவுத்துறையில் தெரிவித்திருந்தையே கணக்கு செய்துள்ளோம். பெரும்பாலும் இவை அப்போதைய அரசு நிர்ணயித்த மதிப்பை விட மிக குறைவாக காட்டப்பட்டுள்ளது. இவரே பதிவுத்துறை அமைச்சராகவும்  இருந்து இவர் துறையிலேயே அதிகாரிகளுடன் சேர்ந்து விலையை குறைத்து மதிப்பீடு செய்து மோசடியும் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   எனவே விசாரணையில் இவரது உண்மையான வாங்கிய விலையை கணக்கீடு செய்தால் இங்கு சொல்லப்பட்ட தொகையை விட அது பல கோடி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அது அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையின் பொழுது கணக்கிட வேண்டும்.

முன்னாள் அமைச்சர் வீரமணி தன் பெயரில் உள்ள அசையும் சொத்து மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் ரூ 43 கோடி அதிகமாகி உள்ளது. மேலும் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் பல ஆசையா சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. பெங்களூர், சென்னை, திருப்பத்தூர் என்று பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்துக்கள் வாங்கி உள்ளார். ஹோசூர் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் லீசுக்காக 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது அதாவது வெறும் ரூ 100 க்கு 0.1 ஏக்கர் நிலம் அமைச்சரின் நிறுவனமான ஹோம் டிசைனர்ஸ் அண்ட் பாப்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட் க்கு 2017 ல் சிப்காட்டால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் ரூ 15 கோடி செலவில் ஹோட்டல் ஹோசூர் ஹில்ஸ் கட்டப்பட்டுள்ளது.

மேலும் பல நிலங்கள் முன்னாள் அமைச்சர் தனது தாயார் மணியம்மாள், சகோதரி தன்மானம் சுதா சுஷீலான பெயரில் வாங்கி அதே நாளிலோ அல்லது சில மாதங்களுக்கு பின்னரோ தன் பெயருக்கு தான பத்திரம் மூலம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மேலும் தனது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் 2015 ல் வாங்கப்பட்டது அதே வருடம் முன்னாள் அமைச்சரின் ஆர் எஸ் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தானமாக மாற்றிக்கொண்ட ஆதாரத்தையும் இணைத்துள்ளோம். இப்படி முன்னாள் அமைச்சர் தன் உறவினர்களை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சேர்த்த ஆதாரங்களையும் இணைத்துள்ளோம்.

ஒட்டுமொத்தத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவர் குடும்பத்தினர் 2011 ல் வெறும் ரூ 7.48 கோடி சொத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சமாக ரூ 76.55 கோடி வருமானத்திற்கு மீறிய சொந்தை சட்ட விரோதமாக குவித்துள்ளனர். இதை சரியாக விசாரித்தால் மேலும் பல கோடி ரூபாய் வருமானத்திற்கு மீறிய சொத்து கண்டறிய வாய்ப்புள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி உள்ளது எனவே உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை இந்த புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் பிற குற்றவில் சட்டங்களில் முதல் தகவல் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளோம் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அவருக்கு எதிரான புகார்களை அறப்போர் இயக்கம்தான் வெளியிட்டு இருந்தது. இதன் அடிப்படையில்தான், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!