வேலூரில் துரைமுருகன் மகனை தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தல்... கதறும் ஏ.சி.சண்முகம்..!

Published : Apr 17, 2019, 12:56 PM ISTUpdated : Apr 17, 2019, 01:51 PM IST
வேலூரில் துரைமுருகன் மகனை தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தல்... கதறும் ஏ.சி.சண்முகம்..!

சுருக்கம்

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்துக்கு எதிராக அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடும் ஏசி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.   

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடும் ஏசி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. 

வேலூர் தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி, தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் வேலூரில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், தேர்தல் ரத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், திட்டமிட்டபடி நாளை வேலூரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார்

.  

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ‘’பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்துவிட்டு வேலூரில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினர். 

அப்போது நீதிபதிகள், ’’பணப்பட்டுவாடா விஷயத்தில் குறிப்பிட்ட சில வேட்பாளர்களை எப்படி தகுதி நீக்கம் செய்வது? தேர்வு செய்தவரைத் தான் தகுதி நீக்கம் செய்ய மக்கள் பிரதிநிதி சட்டத்தில் இடம் உண்டு. பட்டுவாடாவில் ஈடுபட்ட வேட்பாளரை தேர்தலில் போட்டியிட எப்படி அனுமதிக்க வேண்டும்?’’எனக் கேள்வி எழுப்பினர். 

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!