ஆட்டோவில் சென்றதால் வழக்குப்பதிவு செய்த போலீஸார்... தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட ஆட்டோ டிரைவர்..!

Published : Jul 02, 2020, 01:35 PM IST
ஆட்டோவில் சென்றதால் வழக்குப்பதிவு செய்த போலீஸார்... தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட ஆட்டோ டிரைவர்..!

சுருக்கம்

சென்னையில் ஆட்டோவில் சென்றதற்காக போலீஸார் வழக்குப்பதிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  

சென்னையில் ஆட்டோவில் சென்றதற்காக போலீஸார் வழக்குப்பதிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை, தாம்பரம், அடுத்த காந்தி ரோடு முடிச்சூர் சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே படப்பையைச் சேர்ந்த 40 வயதான ஹரி என்பவர் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அவரை பிடித்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

இதனால், வேதனையடைந்த ஹரி வழக்குப்பதிவு செய்த அதே இடத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் காயமடைந்த அவருக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. ஏற்கெனவே ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரத்தில் காவல்துறையின் கலக்கத்தில் உள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!