விஜய்க்கு ஒரு நியாயம்... சச்சினுக்கு ஒரு நியாயமா..? வரிந்து கட்டும் ஓ.பி.எஸ் மகன்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jul 15, 2021, 10:49 AM IST
Highlights

சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து, தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசிற்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய். 

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றம் சென்ற நடிகர் விஜய்க்கு முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எம்.பி.,யாக இருக்கும் ஓ.பி.ரவீந்திரநாத் ஏற்கெனவே, ‘’விஜய் ரொம்ப நல்லவர்.  அவரை பாராட்ட வேண்டாம். ஆனால், திட்டமல் இருங்கள் எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஓ.பி.எஸின் மற்றொரு மகனும் விஜய்க்காக வரிந்து கட்டியுள்ளார். 

இதுகுறித்த அறிக்கையில் ஓ.பி.எஸ் மகன், ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உழைப்பால் உயர்ந்தவர்களை அனைவரும் மனதார பாராட்ட வேண்டும். நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரியதற்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து, தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசிற்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்த பணம் பல ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது.

எப்போதும் ஒரு மனிதரின் நிறைகளை குறைவாக பேசுவதும், சிறுசிறு குறைகளை மிகைப்படுத்தி பேசுவது மனித இயல்பாக இருக்கிறது. மேலும் இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய்க்கும் உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்றாகாது. இதே போல் 2012 ல் வரிவிலக்கு கேட்டு சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் கோரிக்கை வைத்தார்கள். இதில் சச்சினுக்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு ரூ 1.13 கோடி வரி விலக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சரிவர புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். எந்த மனிதராக இருந்தாலும் பல கஷ்டங்களையும், விருப்பு, வெறுப்புகளையும், அவமானங்களையும் தாண்டிதான் உயர்நிலைக்கு வரமுடியும். அப்பேற்பட்டவர்களை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை குறைகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’’என தெரிவித்துள்ளார். 

click me!