கல்யாணம் ஆன பெண்ணை கழிவறையில் வைத்து நாசம் செய்த 15 வயது சிறுவன்.. 5 ஸ்டார் ஓட்டலில் பயங்கரம் .

By Ezhilarasan BabuFirst Published Jun 20, 2022, 5:37 PM IST
Highlights

திருமணமான பெண்ணை ஓட்டல் கழிவறையில் வைத்து 15 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணமான பெண்ணை ஓட்டல் கழிவறையில் வைத்து 15 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, ஆறு மாதக் குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் 24 வயது பெண்ணை 15 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஊழியராக பணியாற்றி வருகிறார். அந்த ஓட்டலில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் குடும்பத்துடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தான். இந்நிலையில் ஓட்டல் கழிவறையில் பெண் இருப்பதைக் கண்ட அந்த சிறுவன் பெண்கள் கழிவறையில் திடீரென நுழைந்தான்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், பெண்கள் கழிவறைக்குள் வரக்கூடாது என்றும் இங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் எனக் கூறினார். சார்ஜ் போட வந்தேன்  எனக் கூறிய அந்த சிறுவன், அந்த பெண்ணிடம் வலிய பேசினான், ஆனால் அந்த பெண் கழிவறையில் இருந்து வெளியேற முயன்றார், அதற்குள் அந்த சிறுவன் கழிவறையின் கதவுகளை தாழிட்டான், இதனால் அந்த பெண்ணால் வெளியில் வர முடியவில்லை, கழிவறையிலிருந்தவாறு சத்தமிட்டார் ஆனால் யாருக்கும் கேட்கவில்லை, இந்நிலையில் அந்த சிறுவன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தான். இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள அந்த பெண், திடீரென கழிவறைக்குள் வந்த அச்சிறுவன் கதவை மூடிக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தார், உதவி கேட்டு சத்தம் போட்டேன், கதவு மூடப்பட்டு இருந்ததால் யாருக்கும் கேட்கவில்லை.

அந்த சிறுவன் கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார் என தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள ராஜ்பூர் காவல் நிலைய அதிகாரி மோகன்சிங் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில்  பிரிவு 376- கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இது குறித்து தெரிவித்துள்ள ஹோட்டல் நிர்வாகம் எங்கள் விருந்தினர்கள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த சம்பவத்தில் உள்ளூர் போலீசாருடன் நாங்கள் மிக நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம் என கூறி உள்ளது. 

 

click me!