உள்ளாட்சி தேர்தல்.. 9 மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Sep 28, 2021, 08:52 PM IST
உள்ளாட்சி தேர்தல்.. 9 மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

சுருக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர களப்பணியாற்றி வரும் நிலையில் தேர்தல் நாளன்று 9 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த அறிவிப்பை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏனைய 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி