டெல்டா மாவட்டங்களில் 40 தொகுதிகள் திமுகவுக்குதான்... மாஜி அமைச்சர் தாறுமாறு கணிப்பு..!

By Asianet TamilFirst Published Feb 27, 2021, 8:51 PM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்காற்றும் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
 

திருச்சி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பங்கேற்று பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளாகத் திமுக ஆட்சி பொறுப்பில் இல்லை. இதனால் கட்சிக்காரர்களுக்குக் கிடைக்கவேண்டிய எந்தப் பணிகளும் திட்டமும் கிடைக்காமலேயே போய்விட்டது. தமிழகத்திலும் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக முடங்கிபோய் விட்டன. ஆளும் அதிமுகவினர் நாட்டை வளப்படுத்தவில்லை. தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டுவிட்டனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்காற்றும். டெல்டா மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளில் 40 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 150 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுகவினர் எவ்வளவு செலவு செய்தாலும் வெற்றி பெற முடியாது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நமக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் எல்லாம் நிச்சயம் கிடைக்கும்'' என்றார்.

click me!