மூன்று அணியினரும் தனித்தனியாக பேச்சுவார்த்தை...தொடரும் பரபரப்பு...!!

Asianet News Tamil  
Published : Aug 18, 2017, 05:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
மூன்று அணியினரும் தனித்தனியாக பேச்சுவார்த்தை...தொடரும் பரபரப்பு...!!

சுருக்கம்

3 teams discussion separately

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்  ஆகியோர் தனித்தனியாக  அவர்களது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சென்னையில் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இணைப்பு  குறித்து இரு தரப்பினரும் தற்போது பேசி வருகின்றனர். ஓபிஎஸ் அணியின் சார்பில்  வைக்கப்பட்ட  இரண்டு கோரிக்கைகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அணிகள்  இணைப்பு குறித்து தீவிரமாக   பேசி வருகின்றனர்.

இந்நிலையில் அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர், தங்களது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன்  சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொடரும் இந்த  ஆலோசனைக் கூட்டங்களால் பரபரப்பு நிலவிவருகிறது

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!