
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்! என்ற பழமொழி, தமிழர்களிடையே நிலவி வருகிறது. அந்த பத்து விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து தமிழ்ப்பாடல்
ஒன்று விளக்குகிறது. அதில் மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு
மனிதனுக்கு பசி வரும்போது அவனது குணநலம் மாறும் என்பதை அப்பாடல் குறிப்பிடுகிறது. இந்த பாடலை ஔவையார் எழுதியுள்ளார். அந்த பாடல்,
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
பசி ஏற்படும்போதும் ஏற்படும் குணநலன் குறித்த ஆராய்ச்சி அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், பசி மிகுந்த நபர்கள் மன அழுத்தம் மற்றும் வெறுப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.