நீட் தேர்வில் 80% வெற்றி பெற இதை முழுமையாக படித்தாலே போதும்..! அமைச்சர் செங்கோட்டையான் அதிரடி ..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 18, 2020, 01:38 PM IST
நீட் தேர்வில் 80% வெற்றி பெற இதை முழுமையாக படித்தாலே போதும்..! அமைச்சர் செங்கோட்டையான் அதிரடி ..!

சுருக்கம்

தமிழ் வழிகல்வி பயிலும் மாணவர்களும் மிகுந்த பாதிப்பு அடைவார்கள் என எடுத்துரைக்கப்பட்டது. 

நீட் தேர்வில் 80% வெற்றி பெற இதை முழுமையாக படித்தாலே போதும்..! அமைச்சர் செங்கோட்டையான் அதிரடி ..! 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வருகிறார். அதன்படி புதிய பாடத்திட்டம் மாற்றம் வருகைப் பதிவேடு, இலவச பயிற்சி மையங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கண்டிப்பாக நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு உறுதி செய்த பின்னர் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழ் வழிகல்வி பயிலும் மாணவர்களும் மிகுந்த பாதிப்பு அடைவார்கள் என எடுத்துரைக்கப்பட்டது. இருந்தபோதிலும் நீட் தேர்வு கட்டாயம் தமிழகத்தில் கொண்டு வரப்படாது என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனாலும் இதனை எதிர்கொள்ளும் பொருட்டு தற்போது தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட திட்டத்தை முழுமையாக படித்தால், தேர்வில் 80 சதவீதம் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு தரப்பில் இருந்து இலவச நீட் தேர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என சட்டப்பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?