
தூத்துக்குடி அதிசயம்..! பனை மரத்தில் பீறிட்டு அடிக்கும் தண்ணீர்..! அதிசயத்தை காண குவியுது மக்கள்...!
பனை மரம் ஒன்றில் திடீரென தண்ணீர் பீறிட்டு விழும் அதிசயம் தூத்துக்குடியில் தற்போது நிகழ்ந்து உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் பனை மரம் ஒன்று உள்ளது. இந்த பனை மரம் கருகி போயுள்ளது. பல நாட்களாக அப்படியே இருந்த இந்த பனை மரத்தில் திடீரென தண்ணீர் பீறிட்டு வந்துள்ளது.
நிலத்திலிருந்து 8 அடி உயரத்தில், மரத்தின் ஒரு பகுதியில் ஓட்டை போட்டவாறு உள்ளது. இதிலிருந்து எப்படி தண்ணீர் வருகிறது என்றே தெரியாமல் இந்த காட்சியை கண்டவர்கள் பிரமித்து நின்று உள்ளனர். இந்த செய்தி அக்கம் பக்கத்தினருக்கு தெரியவே தற்போது, இந்த காட்சியை பார்க்க ஏராளன பொதுமக்கள் கூடிய வண்ணம் உள்ளனர்.
வறட்சி பகுதிகளில் கூட நீர் இன்றி விளைந்து பயன்தரக்கூடிய பனையில் இருந்து நீர் வெளியேறும் அதிசய காட்சிக்கு பின் உண்மை என்ன என ஆராய்ந்து வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.