
சருமத்திற்கு வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்யும் போது, முகப்பரு, எரிச்சல், சருமம் சிவந்து போவது,அலர்ஜி போன்ற பின்விளைவுகளை ஏற்படுவதை தவிர்க்க பயனுள்ள சில வழிமுறைகள் உள்ளன.
உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க ரேஸர் அல்லது வேக்ஸிங் மற்றும் த்ரெட்டிங் பயன்படுகிறது. செய்யும் போது பயன்படுத்தும் மெழுகு சமயங்களில் தவறாக கையாண்டாலும் முடிகளை வேகமாக இழுக்கும் போதும் அது சருமத்தில் எரிச்சலுக்கும் தடிப்புக்கும் வழிவகுக்கும். சிலர் வீட்டில் வேக்ஸிங் செய்யும் போது எப்படியாவது முடி வெளியேறினால் போதும் என்று கடுமையான பராமரிப்பை மேற்கொள்வதும் உண்டு.கை, கால் உள்ளிட்ட உடலின் எந்த பகுதியில் இதனை செய்தாலும் வலி அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் நன்கு அறிந்த விஷயம்.
இந்த சிக்கலைக் குறைக்கவும் தவிர்க்கவும் பல வழிமுறைகள் இருக்கின்றன. த்ரெட்டிங் அல்லது வேக்ஸிங் செய்த பிறகு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
முகம் போன்ற மெல்லிய மற்றும் உணர்வுத்திறன் அதிகம் கொண்ட சருமத்திற்கு வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்யும் போது, முகப்பரு, எரிச்சல், சருமம் சிவந்து போவது, அலர்ஜி போன்ற தேவையற்ற பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
வேக்ஸிங் செய்யும் முன்:
முகத்தில் உள்ள எக்ஸ்ட்ரா ரோமத்தை அகற்ற வேக்ஸிங் செய்யும் முன்பு உங்களுடைய முகத்தை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். முகத்தில் எந்தவிதமான லோஷன்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் பூசப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் முகத்திற்கு ஒரு நல்ல எக்ஸ்போலியேட்டரை பயன்படுத்துவது இறந்த செல்களை நீக்க உதவும்.
ஐஸ்க்யூப்:
நீங்கள் முகத்திற்கு வேக்ஸிங் செய்த பிறகு அந்த இடத்தில் அதிக எரிச்சல், உபாதை கொண்டிருந்தால் நீங்கள் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம். ஆனால் வேக்ஸிங் செய்த ஒரு மணி நேரத்தில் இதை பயன்படுத்திவிட வேண்டும். வீக்கம், எரிச்சலை கட்டுப்படுத்த இவை இயற்கையான தீர்வாகும். வேக்ஸிங் செய்த பிறகு குளிர்ந்த நீரில் நனைத்த துணி அல்லது ஐஸ் கட்டியை 20 நிமிடங்கள் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
வெப்பத்தை தவிர்க்கவும்:
வெப்பத்தால் வீக்கம் அதிகரிக்கலாம், எனவே வேக்ஸிங்கிற்கு பிறகு முடிந்த அளவிற்கு முகத்தை வெயிலில் இருந்து பாதுகாப்பது நல்லது. ஸ்கார்ப் அல்லது துப்பட்டா கொண்டு முகத்தை மூடிக்கொள்ளலாம். அதேபோல் வேக்ஸிங்கிற்கு பிறகு சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழம்:
முகத்துக்கு ஃபேக் போன்று வாழைப்பழத்தை பயன்படுத்துவதா என்று கேட்கலாம். ஆனால் உங்கள் சருமம் மென்மையானதாக இருந்தாலும், வறட்சியாக இருந்தாலும் அதிக பாதிப்பை அடையும். இது வேக்ஸிங் செய்த இடத்தின் சரும நிறத்தையே மாற்றும் அளவுக்கு இருக்கும். நீங்கள் மற்ற தேர்வுகளை காட்டிலும் வாழைப்பழ பேக் பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்பு நேராமல் பாதுகாக்கலாம்.
கற்றாழை:
அலோவேரா எனப்படும் சோற்றுக்கற்றாழை இயற்கையாகவே நம்ப முடியாத அளவிற்கு சரும அழற்சிக்கான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. வேக்ஸிங்கிற்கு பிறகு சிறிய துண்டு கற்றாழையை எடுத்து, தினந்தோறும் 3 முறை பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது வைத்து மசாஜ் கொடுக்கலாம். எந்த வகையைச் சார்ந்தது என்பதை சரும பராமரிப்பு நிபுணர் அல்லது அனுபவமிக்க அழகு கலை நிபுணர் உதவியுடன் பரிசோதித்து கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய சருமம் உணர்திறன் அதிகம் கொண்டதாக இருந்தால் நிச்சயம் செமி சாலிடான கோல்டு வேக்ஸிங்கை தேர்வு செய்வது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.