Horoscope: ஏப்ரல் 25-ம் தேதி நிகழும் புதனின் ராசி மாற்றம், இந்த 5 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கப்போகிறது.
ஜோதிடத்தின் படி, பகுத்தறிவு, கல்வி, எழுத்து, பேச்சாற்றல், புத்திசாலித்தனம் போன்றவற்றின் காரணியாக திகழும் புதன் கிரகம் புதன் கிரகம் 2022 ஏப்ரல் 25-ம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது. புதனின் இந்த ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நாளாக அமையும்.
நீண்ட நாட்களாக திருமண தடை ஏற்பட்டுஉள்ளவர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுமுறை கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும். கீழே குறிப்பிட்டுள்ள 5 ராசியினருக்கு தொழிலில் சாதகமான வெற்றி வாய்ப்பு தேடி வரும். அப்படியாக நிகழும் புதனின் மாத்திரம் யார் யாருக்கு என்னென்னெ பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். இருப்பினும், எதிலும் நிதானம் அவசியம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி வாழ்வில் முன்னேற்றம் காணப்படும். வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆசைகள் நிறைவேறும், பதவி உயர்வு, சம்பளம் உயர்வு ஏற்படும். முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரம். பெரிய பதவி கிடைக்கலாம். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சிம்மம்:
புதனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தேடி தரும். பதவி உயர்வு- சம்பள உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். நீங்கள் தொலைத்த பணம் உங்களுக்கு திரும்ப வரும். அன்பையும் மரியாதையையும் பரிமாறிக் கொள்வீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த நாள் இனிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், மேலும் வருமானம் உயரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பையும் மரியாதையையும் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் கோபத்தைக் குறைத்து கொள்ளுங்கள்.