சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்வீட் நியூஸ்….மிகக் குறைந்த விலையில் மருந்து !!

Published : Dec 11, 2019, 08:51 PM IST
சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்வீட் நியூஸ்….மிகக் குறைந்த விலையில் மருந்து !!

சுருக்கம்

சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மருந்தின் விலை கூடிய விரைவில் குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

சர்க்கரை நோயாளிகள் மாத்திரையாக பயன்படுத்தும் Vildagliptin என்ற மருந்தை சுவிஸ் நாட்டின் NOVARTIS என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மருந்துக்கு அந்த நாடு மட்டுமே பேட்டர்ன் ரைட் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த மருந்துக்கான இந்நிறுவனத்தின் காப்புரிமை காலம் நேற்றோடு நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மருந்து தயாரிப்பில் இருக்கும் 15 முதல் 20 நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்து பாதி விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.

ஒரு Vildagliptin மருந்து 20 முதல் 25 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் இந்த மருந்தை 5 முதல் 6 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகின்றன.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான சிப்லா, சைடஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்தின் தயாரிப்பை தொடங்க உள்ளன. அதே நேரத்தில் இந்த நிறுவனங்களிடையே போட்டி அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகளின் ஒரு நாளைய மருந்துக்கான செலவு 10 ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்