50 அடி வரை கடல் அடிக்குள் சென்ற ரஷ்ய அதிபர்..! ஏன் தெரியுமா..?

Published : Jul 28, 2019, 02:50 PM IST
50 அடி வரை கடல் அடிக்குள் சென்ற ரஷ்ய அதிபர்..! ஏன் தெரியுமா..?

சுருக்கம்

இரண்டாம் உலகப்போரில் கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பலை ரஷ்ய அதிபர் சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பலை ரஷ்ய அதிபர் சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கடற்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை காரணமாக வைத்து அதிபர் விளாடிமிர் புதின் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் சென்று, இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட்டார். அதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோக்லாந்து தீவிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் பின்லாந்து வளைகுடா பகுதிக்கு சென்றடைந்த அவர், சுமார் 50 அடி கடல் ஆழத்தில் மூழ்கி இருந்த நீர்மூழ்கி கப்பலை பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,"இன்று ரஷ்ய கடற்படை தினம் கொண்டாடப்படுவதால், தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும் மேலும் ரஷ்ய மக்கள் எந்த அளவிற்கு உழைப்பாளி மற்றும் அவர்களின் மிகத் துரிதமான பணிகளை புரிந்து கொள்வதற்காகவே இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் கடலில் 50 அடிவரை உள்சென்று, பார்வையிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்