
டிக்-டாக் கிற்கு செம்ம ஆப்பு..!
டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ததகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
டிக் டாக் செயலி தற்போது இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இந்த செயலி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு கதாநாயகன் கதாநாயகி என நினைத்து கொள்ளும் அளவிற்கு புகுந்து விளையாடுகிறாரகள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, எல்லை மீறிய காட்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள இந்த டிக் டாக் செயலியில் இல்லாததே இல்லை என்ற அளவிற்கு டைம் பாஸ் செய்கின்றனர் நம் இளைஞர்கள். இவர்களுக்கு நேரம் செல்வதும் தெரியாது..வேளையில் கவனம் இருக்காது.. ஏன் சாப்பிட கூட தோணாது..அந்த அளவிற்கு இதுலயே ஊறி உள்ளனர். இந்த நிலையில், டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமூன் அன்சாரி கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப்ளூ வேல் விளையாட்டு எப்படி மத்திய அரசு தலையிட்டு தடை செய்ததோ அதேபோல் டிக் டாக் ஆப் தடை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலும் இந்த டிக் டாக் செயலியின் சர்வர் ரஷ்ய நாட்டில் செயல்படுவதால் மத்திய அரசிடம் இது தடை செய்வது குறித்து வலியுறுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.ஆக மொத்தத்தில் விரைவில் டிக் டாக்கிற்கு ஆப்பு ரெடி..!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.