கணவரிடம் சண்டை போட்ட பிறகு 'இந்த' விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீங்க.. அவ்வளவுதா சொல்லுவ..

Published : Jul 20, 2024, 09:48 AM IST
கணவரிடம் சண்டை போட்ட பிறகு 'இந்த' விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீங்க.. அவ்வளவுதா சொல்லுவ..

சுருக்கம்

Relationship Tips : கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் வருவது சகஜம் தான். ஆனால், உங்கள் கணவருடன் சண்டையிட்டால், சில விஷயங்களை செய்யவே கூடாது. இது சண்டையை மேலும் அதிகரிக்கும்.

எந்த ஒரு உறவிலும் சண்டை வருவது சகஜம்தான். சண்டை வராத உறவு ஒரு உறவு அல்ல என்று பல சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சரியான உறவு என்பது சண்டையை மேலும் எடுத்துச் செல்வது அல்ல. நீங்கள் ஒரு உறவில் இருந்தால் சண்டையை அதிகமாக அதிகரிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கணவருடன் சண்டையிட்டால், சில விஷயங்களை செய்யவே கூடாது. இது சண்டையை மேலும் அதிகரிக்கும், ஒருபோதும் நிறுத்தாது. இதுபோன்ற சில விஷயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சண்டைக்கு பிறகு தங்கள் துணையுடன் விரைவாக சமரசம் செய்து கொள்ளும் பழக்கம் பொதுவாகவே பலருக்கும் இருக்கும். மேலும், உங்கள் துணையுடன் சண்டையிட்ட பிறகு சிக்கலைத் இருப்பதை பற்றி நீங்கள் யோசிப்பது மிகவும் அவசியம். அதை தீர்க்க முயற்சிக்கும்போது சில தவறுகள் ஏற்படுகின்றன. அவற்றை உடனே சரி செய்வது தான் உங்களுக்கு நல்லது. 

1. முடிந்துபோன சண்டைகளைப் பற்றி பேச வேண்டாம்
கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் வருவது இயல்பு. மேலும் அது காலப்போக்கில் குறையும். ஆனால், அதை மீண்டும் மீண்டும் நினைவில் வைத்துக் கொள்வது தான் மிகப்பெரிய தவறு.  மேலும், இது பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வராது. எனவே, நீங்கள் சண்டையை முடிக்க விரும்பினால் சண்டை தொடங்கியதைப் பற்றி ஒருபோதும் பேச வேண்டாம். ஏனெனில், அவ்வாறு செய்தால் சண்டை மேலும் அதிகரிக்கத் தொடங்கும்.

2. பாசாங்கு செய்யாதே!
நீங்கள் சண்டையை தீர்க்க சமதானம் செய்ய விரும்பினால், அதை இதயத்தில் இருந்து செய்யுங்கள். போலியாக அல்ல. ஏனென்றால், பெரும்பாலும் போலி உணர்ச்சிகள் முன்னுக்கு வந்து, பின்னர் ஒரு புதிய பிரச்சனையாக தொடங்கும். தவறு உங்களுடையதாக இருந்தால் அதை எளிதில் ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பும் கேளுங்கள். ஒருவேளை உங்கள் மீது தவறு இல்லை என்றால் விஷயங்களையும், சூழ்நிலைகளையும் புரிந்துகொண்டு நீங்கள் அதை தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆனால், சமரசம் செய்வது போல் நடிப்பது, இது நல்ல உறவுக்கு நல்லதல்ல. உங்கள் துணையுடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை உடனே தீர்த்து விவாதித்து தீர்வைக் காணுங்கள்.

3. சண்டையைத் தீர்க்க அவசரப்பட வேண்டாம்:
சண்டையை தீர்க்க அவசரப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரச்சனை என்று வந்தால் அதில் விவாதம் நடந்தால் உங்கள் துணை பேச இருக்க வாய்ப்பு கொடுங்கள். உரையாடல் மூலம் தீர்வு காண்பதே சரியான வழி. எனவே, சரியான வாய்ப்புக்காக காத்திருங்கள். கோபத்தில் சரியானது கூட தவறாக தோன்றிவிடும். மேலும், சரியான முடிவை எடுப்பது கடினமாக இருக்கும். முக்கியமாக, சண்டைக்கு பிறகு பழிவாங்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க