தமிழகத்தில் மழை..! ஆனால் இந்த 4 இடங்களில் மட்டும் தான் பொழியுமாம்..!

Published : Jul 03, 2019, 01:53 PM IST
தமிழகத்தில் மழை..! ஆனால் இந்த 4 இடங்களில் மட்டும் தான் பொழியுமாம்..!

சுருக்கம்

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திண்டுக்கல் கோவை நீலகிரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் மற்ற இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் அதிகபட்சமாக தேவாலாயாவில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பூனே மற்றும் மும்பை மிக முக்கியமாக பெருமளவு பாதித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல், ரயில் சேவை, மின்சார துண்டிப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!