முதல்வர் அதிரடி..! நாளை மறுதினம் முதல் பொங்கல் பரிசு ரெடி...!

Published : Nov 27, 2019, 03:55 PM IST
முதல்வர் அதிரடி..! நாளை மறுதினம் முதல் பொங்கல் பரிசு ரெடி...!

சுருக்கம்

கள்ளக்குறிச்சி துவக்க விழா நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்து உள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வர இன்னும் ஒன்றரை மாதம் உள்ள நிலையில் இப்போதே திருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்ற வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் அதிரடி..! நாளை மறுதினம் முதல் பொங்கல் பரிசு ரெடி...! 

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை கரும்பு திராட்சை முந்திரி அடங்கிய அனைத்தும் பொங்கல் பரிசு தொகுப்பாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனுடன் ரூபாய் 1000 பரிசு தொகையாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். 

கள்ளக்குறிச்சி துவக்க விழா நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்து உள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வர இன்னும் ஒன்றரை மாதம் உள்ள நிலையில் இப்போதே திருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்ற வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்காக ரூ.2363 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நாளை மறுதினம் இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Cleaning Tips: இரும்பு பீரோவில் விடாப்பிடியான கறையா? சுலபமாக பளபளக்க வைக்க 'சூப்பர்' டிப்ஸ்!
Turmeric Milk: தூங்குவதறதுக்கு முன் மஞ்சள் பால் குடிச்சா இவ்ளோ நல்லதா?