அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி..! என்னதான் இருந்தாலும் அவர் வேலையில் செம்ம மாஸ்..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 11, 2020, 08:06 PM IST
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி..! என்னதான் இருந்தாலும் அவர் வேலையில் செம்ம மாஸ்..!

சுருக்கம்

தொடக்கம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த ஆம்ஆத்மி கடைசியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மீதமுள்ள 8 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் ஆளாய் வாழ்த்து தெரிவித்த மோடி..! என்னதான் இருந்தாலும் அவர் வேலையில் செம்ம மாஸ் தான்..! 

நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு.

கடந்த எட்டாம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 11 ஆம் தேதியான இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

 

தொடக்கம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த ஆம்ஆத்மி கடைசியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மீதமுள்ள 8 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாகப் பூர்த்தி செய்ய வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்