பிரதமரை கண் கலங்க வைத்த பெண்..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 07, 2020, 03:16 PM IST
பிரதமரை கண் கலங்க வைத்த பெண்..!

சுருக்கம்

கொரோனா வைரஸ் குறித்து எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் மருத்துவரை அணுகி, எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

பிரதமரை கண் கலங்க வைத்த பெண்..!  

மக்கள் மருந்தகம் திட்டத்தின் மூலம் பயன் பெற்ற நபர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்தினார்.

அப்போது தீபா ஷா என்ற பெண் தனது வாழ்க்கை சம்பவங்களை பற்றி எடுத்துரைக்கும் போது பிரதமர் மோடியும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.மார்ச் 1ம் தேதி முதல் ஏழாம் தேதியான இன்று வரை ஒரு வாரகாலம் மக்கள் மருந்தக வாரம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அந்த  வகையில் நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்திய மோடி,

கொரோனா வைரஸ் குறித்து எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் மருத்துவரை அணுகி, எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவை இல்லாமல் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துக்கொண்டார். மேலும் கைகுலுக்கி பேசுவதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை மீண்டும் கடைபிடிப்பது நல்லது என கேட்டுக்கொண்டார்.

மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகளை பெற்று பயன்பெறுகின்றனர்.இந்தத் திட்டம் சிறந்த, நிலையான, நல்ல வருவாய் கொண்ட வேலைவாய்ப்பு திட்டமாகவும் உள்ளது என தெரிவித்து உள்ளார் மோடி. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்