எடை கற்களை பயன்படுத்த வருகிறது அதிரடி தடை..!

Published : May 21, 2019, 02:28 PM IST
எடை கற்களை பயன்படுத்த வருகிறது அதிரடி தடை..!

சுருக்கம்

அரிசி பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் எடையை அறிய கடைக்காரர்கள் பயன்படுத்தி வரும் கற்களின் பயன்பாடு மிக விரைவில் தடை செய்யப்பட உள்ளது.  

எடை கற்கள் பயன்படுத்த வருகிறது அதிரடி தடை..! 

அரிசி பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் எடையை அறிய கடைக்காரர்கள் பயன்படுத்தி வரும் கற்களின் பயன்பாடு மிக விரைவில் தடை செய்யப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் கொள்கை அமைப்பு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக 50 கிராம், 100 கிராம், 200 கிராம், 500 கிராம், ஒரு கிலோ, 2 கிலோ, 5 கிலோ எடை கொண்ட கற்களை பயன்படுத்தி தான் உணவுப் பொருட்களை எடை போட்டு மக்களுக்கு வழங்கி வரும் பழக்கம் தற்போது வரை உள்ளது.

இந்நிலையில் இதற்கு தடை விதித்து அதற்கு பதிலாக மிக மிக துல்லியமாக அளவிட கூடிய மின்காந்த அளவீட்டு கருவிகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்தந்த நாடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் திட திரவப் பொருட்களை அளவிடுவதற்கும் மற்ற அதிநவீன மெஷின்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், உடல் வெப்பநிலையை அளக்கும் முறையிலும் மாற்றம் கொண்டுவரும் அதிநவீன மெஷின்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்