Maha Shivaratri pray: களைகட்டிய மகா சிவராத்திரி வழிபாடு...சிவாலயங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 01, 2022, 01:13 PM ISTUpdated : Mar 01, 2022, 03:12 PM IST
Maha Shivaratri pray: களைகட்டிய மகா சிவராத்திரி வழிபாடு...சிவாலயங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

சுருக்கம்

Maha Shivaratri pray: மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசித்து வருகின்றனர். 

மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசித்து வருகின்றனர். 

இந்த வருடம் மகாசிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இந்து மதத்தில் சிவபெருமானின் வீடு கைலாச மலை என்று கூறப்படுகிறது. பரவலான நம்பிக்கையின்படி, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் சிவராத்திரி நன்னாளன்று தான் திருமணம் நடைபெற்றது.

இந்நாளில், சிவ பக்தர்கள் அதிகாலையில் குளித்து முடித்து, விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் சிறிதும் உறங்காமல் அருகிலுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று சிவனை கண்டு தரிசித்து, மறுநாள் அதிகாலையில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் தன்னுடைய விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாக கொள்வார்கள்.

மேலும் படிக்க...Maha Shivaratri Pooja: மகாசிவராத்திரி நாளில்...பூஜை செய்து சிவனின் அளவற்ற அருளை பெறுவது எப்படி?

இந்த நாளில்,சிவபெருமானை முழு பக்தியுடனும் சடங்குகளுடனும் வழிபட்டால், சிவ பெருமான மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என அனைத்தையும் தருவார் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

அதன்படி,மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க...Maha Shivaratri Fasting: மகாசிவராத்திரி விரதமுறைகள் தெரியுமா...? விரதமிருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை.?

நேற்று மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற வகையான   ஆராதனை நடைபெற்றது. நடந்தன. ஏராளமான பக்தர்கள் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திபாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க .....Maha Shivaratri mantra: சிவசிவ என்றிட தீவினை தீருமாம்...மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரங்கள்!

மேலும் படிக்க,...Shivaratri Palan: சிவராத்திரி நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்