
இன்று பெரும்பாலான குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடுவது, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றுக்கு பதிலாக, ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி ஆகியவற்றில் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். ஆனால், இப்படி நீண்ட நேரம் திரையின் முன் இருந்தால் குழந்தையின் கண் மற்றும் மூளையின் செயல்பாடு மோசமாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல திரையின் முன் அதிக நேரம் செலவிடுபவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். எனவே, இந்த கட்டுரையில் கண்களை எவ்வாறு பராமரிப்பது எப்படி மற்றும் குழந்தைகளுக்கு மொபைல் ஃபோன் கொடுக்கும் அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
குழந்தையின் திரை நேரம் எவ்வளவு?:
ஆய்வு ஒன்றில், குழந்தைகளின் உடல் செயல்பாடு, திரை நேரம் மற்றும் தூக்கம் ஆகியவை ஆராயப்பட்டது. அதில் 2 மணி நேரத்திற்கு மேல் திரையின் முன் இருப்பது குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்தது.
மேலும் குழந்தைகளுக்கு ஸ்கிரீனிங் டைம் அவசியமில்லை. எனவே, முடிந்த அளவிற்கு அவர்களை டிவி, மொபைல் ஃபோனில் இருந்து விலகி வையுங்கள். இது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை ஆகும். ஒரு வேலை ஸ்கிரீனிங் டைம் தேவை என்றால், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : ஒரு குழந்தையின் பெற்றோருக்கான பெஸ்ட் அட்வைஸ்..!
குழந்தைகள் அதிக நேரம் திரையில் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்:
இதையும் படிங்க: Parenting Tips : குழந்தைகள் கீழ்ப்படிய வேண்டுமா..? அப்ப முதல்ல இந்த விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்..
இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.