
வட இந்தியாவில் இருந்து புரிந்து தென் மாநிலங்களில் தங்களுடைய வியாபாரத்தை செய்து வரும் பலரும் திருட்டு சம்பவம், வழிப்பறித்தல்,குழந்தை கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.அதிலும் குறிப்பாக, குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் கையாளும் முறையை கண்டால்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடு வீடாக சென்று பெட்ஷீட்,ஆடைகள்,கம்பளி விற்பது போன்று செயல்பட்டு,எந்தெந்த வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்....எப்படி பட்டவர்கள்...குழந்தை உள்ளதா?எத்தனை வயது குழந்தை..? இது போன்று பல விஷயங்களை நோட்டம் கண்டு விடுகின்றனர்.
பின்னர் அடையாள துண்டை,மற்றவர்களும் சைகையாக பயன்படுத்திக்கொண்டு தருணம் பார்த்து குழந்தைகளை கடத்துவதும்,மற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
எனவே,நம் வீட்டு பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்க,தெரியாத இது போன்ற நபர்களை வீட்டினுள் சேர்க்காமல் இருப்பது நல்லது என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.