டீ கடையில் விற்பனைக்கு வந்தது "நிலவேம்பு கஷாயம்"..! ரூ.35-க்கு அமோக விற்பனை...!

First Published Nov 13, 2017, 2:08 PM IST
Highlights
nilavembu kashayam came for sale in tea shop


டீ கடையில் விற்பனைக்கு வந்தது "நிலவேம்பு கஷாயம்"..! ரூ.35-க்கு அமோக விற்பனை...!

டெங்குவிற்கு சிறந்த மருந்தாக தற்போது வரை அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருவது நிலவேம்பு கஷாயம் என்பது தெரிந்ததே...

தமிழகத்தை இதற்கு முன் அல்லாத அளவிற்கு தினந்தோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கில் பலி வாங்கியது

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நிலவேம்பு கஷாயம் எடுத்துக்கொண்டதால், பாதிப்பின் வீரியம் குறைந்து காய்ச்சல் குறைந்து வந்தது

இதன் காரணமாக தமிழக அரசு, அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும்,பள்ளிகளிலும்  இலவசமாக நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் நிலவேம்பு கஷாயம் அத்தியாவசிய பொருளாக மாறி வருவதை நிரூபிக்கும்  வகையில் டீ கடையில் விற்பனைக்கு வந்துள்ளது

போரூரில் உள்ள  டீக்கடை ஒன்றில் அதற்கான விளம்பர பதாகையும் வைக்கப்பட்டு உள்ளது.

இதன் விலை ரூ.35 என குறிப்பிட்டு ....வாரம் இரண்டு முறைஅருந்தி வந்தால்,எந்த  நோயும் நம்மை அண்டாது என குறிப்பிட்டு அந்த பதாகை வைக்கப்பட்டு உள்ளது

இதனை பார்க்கும் வாடிக்கையாளர்கள், டீ குடிப்பது போலவே வாரம் இருமுறை இதனை அருந்தி வருகிறார்கள்.....

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், நிலவேம்பு கஷாயம் பருகுவதால் தீமை ஏதும் எற்பட போவதில்லை....கசப்பு நம் உடலுக்கு தேவையான ஒன்று தான் ...கசப்பு  எப்பொழுதும் நம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்...

உதாரணம்|: வேப்ப இலை, வேப்பம் பட்டை ...பாகற்காய்... இவை அனைத்துமே நமக்கு  தேவை தான்......

click me!