முள்ளங்கி சாம்பார் ஒருமுறை இப்படி செய்ங்க.. ருசியா இருக்கும்!

By Kalai SelviFirst Published Sep 17, 2024, 1:56 PM IST
Highlights

Mullangi Sambar Recipe : இந்த பதிவில் முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று மதியம் உங்கள் வீட்டில் சாம்பார் வைக்க போகிறீர்கள் என்றால் எப்போதும் போல் வைக்காமல் சற்று வித்தியாசமாக வையுங்கள். அப்படி என்ன வைப்பது என்று தெரியவில்லையாம் அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். உங்கள் வீட்டில் முள்ளங்கி இருக்கிறதா? அப்படி முள்ளங்கி இருந்தால் அதில் சுவையான சாம்பார் வையுங்கள். முள்ளங்கி சாம்பார் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் சுலபமாக செய்து முடித்து விடலாம். மேலும் ஆரோக்கியமானதும் கூட. ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வைத்துக் கொடுங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  வாழைப்பூ வச்சு இப்படி ஒருமுறை சாம்பார் செஞ்சு பாருங்க.. அட்டகாசமா இருக்கும்!

Latest Videos

முள்ளங்கி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் :

முள்ளங்கி - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் -  2 ஸ்பூன்
புளிக்கரைசல் - சிறிதளவு
சாம்பார் பொடி - 2 1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

இதையும் படிங்க:  வெண்டைக்காய் சாம்பார் இப்படி செய்யுங்க.. ரொம்பவே ருசியா இருக்கும்!

செய்முறை :

முள்ளங்கி சாம்பார் செய்ய முதலில், எடுத்து வைத்த முள்ளங்கி கழுவி அதன் மேல் இருக்கும் தோலை சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு துவரம் பருப்பை தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் கழிவு வைத்த பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அதில் பருப்பு வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு இறக்கவும். 

அதன் பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து மசியும் வரை நன்கு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் வெட்டி வைத்த முள்ளங்கி சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு அதில் வேகவைத்து எடுத்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின் இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அடுத்து அதில் புளி கரைசலை சேர்த்து ஒரு முறை கொதிக்க விடுங்கள். சாம்பார் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவுங்கள். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி. சூடான சாதத்திற்கு இந்த முள்ளங்கி சாம்பார் ஊத்தி சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!