
தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு எவ்வளவு நல்லது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை, உடற்பயிற்சியால் பல நன்மைகள் உண்டு. ஆனால், நாம் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறோம் என்பதும் அதன் பலன்களைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
காலையில் சீக்கிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, மற்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்பவர்களை விட இதய நோய் மற்றும் மெட்டபாலிக் நோய்கள் வருவதற்கான அபாயம் மிகவும் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் வருடாந்திர அறிவியல் மாநாட்டில் இந்த ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
"நீங்கள் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் போலவே, எப்போது செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். காலையில் உடற்பயிற்சி செய்வது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்" என்று இந்த ஆய்வின் ஆய்வாளரும், மசாசூசெட்ஸ் சான் மெடிக்கல் ஸ்கூல் மருத்துவ மாணவருமான பிரேம் படேல் கூறியுள்ளார்.
இந்த ஆய்வுக்காக 14,000-க்கும் மேற்பட்டோரின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அனைவரும் ஒரே அளவு உடற்பயிற்சி செய்திருந்தாலும், காலையில் உடற்பயிற்சி செய்தவர்களுக்குக் கிடைத்த பலன்கள் மிகவும் சிறப்பாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, காலையில் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு:
காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் உடற்பயிற்சி செய்வது இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. மேலும், காலையில் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, நாள் முழுவதும் நம்மை ஆற்றலுடன் (எனர்ஜியாக) வைத்திருக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.