
ஒரு பக்கம் கொரோனா...! மறு பக்கம் கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் குரங்கு வைரஸ் காய்ச்சல்...! சோதனை மேல் சோதனை..!
உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம் இருக்கும் போது மற்றொரு புறம் மேலும் அதிர்ச்சியை கிளப்பியும் வகையில் கர்நாடக மாநிலத்தில் வேகாமக பரவி வரும் குரங்கு வைரஸ் காய்ச்சலால் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுக்காவில் மடபூர் கிராமத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காய்ச்சலை பொறுத்தவரை காபி தோட்ட தொழிலாளர்களை தான் அதிகம் பாதிக்கிறதாம். அந்த வகையில் இதுவரை குரங்கு வைரஸ் காய்ச்சல் நோய் 5 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக
அம்மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த வைரஸ் தாக்கம் குறித்து தெரிவிக்கும் போது மத்திய பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தில் வந்த காபி தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து பரவி இருக்க கூடும் என சுகாதார்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.