அய்யோ... கொரோனா வைரஸால் கையில காசு கூட தொட முடியலையே...! உள்ளே உள்ள புகைப்படத்தை பாருங்க!

By ezhil mozhiFirst Published Feb 15, 2020, 6:30 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தோற்று மிக வேகமாக பரவி வரும் தருவாயில் இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு சீனாவில் பயன்பாட்டில் உள்ள கரன்சிகள் அனைத்தும், சுத்தம் செய்யப்பட்டு பெட்டிகளில் தனிமை படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது.

அய்யோ... கொரோனா வைரஸால் கையில காசு கூட தொட முடியலையே...! உள்ளே உள்ள புகைப்படத்தை பாருங்க!

உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பி உள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தோற்று மிக வேகமாக பரவி வரும் தருவாயில் இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு சீனாவில் பயன்பாட்டில் உள்ள கரன்சிகள் அனைத்தும், சுத்தம் செய்யப்பட்டு பெட்டிகளில் தனிமை படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது.

தற்போது வரை சீனாவில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதால் கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களை சுத்தம் செய்வதும், மக்களுக்கு இடையேயான தொடர்பை கட்டுப்படுத்தவும் புதிய முயற்சியை கையாண்டு வருகிறது சீனா 

இதன் படி கரன்சி மூலம் வைரஸ் பரவலை தடுக்க அதிக வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கிய பின் அந்த பணத்தை ஒரு பெட்டிக்குள் வைத்து சீல் இட்டு 2 வாரத்திற்கு தனிமை படுத்தப்படுவதாக அறிவித்து உள்ளது 

click me!