கொரோனா தடுப்பூசி மூலம் மனித உடலில் செலுத்தப்படும் மைக்ரோசிப்..? இதற்காகத்தான் பரப்பப்பட்டதா வைரஸ்..?

Published : Sep 30, 2020, 10:52 AM IST
கொரோனா தடுப்பூசி மூலம் மனித உடலில் செலுத்தப்படும் மைக்ரோசிப்..? இதற்காகத்தான் பரப்பப்பட்டதா வைரஸ்..?

சுருக்கம்

தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.   

தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. உலகில் பல நாடுகளின் முயற்சியில் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து 26 மருந்துகள் மனித உடலில் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் பொருத்தப்படுவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனுடன் வரும் வீடியோவில், மைக்ரோசிப் உருவாக்கிய குழுவில் அங்கம் வகித்த திட்ட மேலாளர் என கூறும் நபர் பகீர் தகவல்களை தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த வீடியோ 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வீடியோவில் இருப்பது அமெரிக்க மத போதகர் கால் சாண்டர்ஸ். உண்மையில் இவர் மைக்ரோசிப்களை பற்றியே பேசி இருக்கிறாரே தவிர, கொரோனா வைரஸ் பற்றி பேசவில்லை. அந்த வகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் பொருத்தப்பட இருப்பதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகி உள்ளது.  இதன் மூலம் இந்தச் செய்தி போலியானது எனத் தெரிய வந்துள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்