மாடுகளுக்காக மேட்ரிமோனி... இனப்பெருக்கத்திற்காக முயற்சி...!

Published : Dec 25, 2019, 06:00 PM IST
மாடுகளுக்காக மேட்ரிமோனி... இனப்பெருக்கத்திற்காக முயற்சி...!

சுருக்கம்

மத்திய பிரதேச மாநில அரசு காளை மாடுகள் குறித்த தகவல்களுக்காக பிரத்யேக மேட்ரிமோனி சேவையை தொடங்கியுள்ளது.  

மாடுகளை பாதுகாக்க, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், காளை மாடுகள் குறித்த தகவல்களை விவசாயிகள் பெற வேண்டும் என்பதற்காக பிரத்யேக இணைய சேவையை தொடங்கி நடத்தி வருகிறது மத்தியப் பிரதேசத்தின் கால்நடைகள் பராமரிப்பு அமைச்சகம்.

cssbhopal.com என்ற இணையதளத்தில், காளை மாடுகளின் வகை, பிறந்த தேதி உள்ளிட்ட பல தகவல்கள் இருப்பதாகவும், 16 வகைகளை சேர்ந்த சுமார் 200 காளைகள் பற்றிய தரவுகளை சேகரித்து பதிவேற்றம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் காளைகளின் Semen-ஐ செயற்கையான முறையில் சேகரித்து பதப்படுத்தி வைத்து, அது குறித்த தகவல்களையும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறது மத்தியப் பிரதேச கால்நடைகள் பராமரிப்பு அமைச்சகம்.

 

மாடுகளின் புகைப்படம், அவற்றின் உயரம், எடை, உரிமையாளர் உள்ளிட்ட பல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இனப்பெருக்கத்திற்காக காளைகளை தேடும் பசு மாடு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த இணையதளம் மிக பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரி தீபாலி தெஷ்பாண்டே தெரிவித்துள்ளார். பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்தியப் பிரதேச அரசின் இந்த புதிய முயற்சி, அம்மாநில விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Healthy Breakfast Ideas : 60 வயதிலும் சுறுசுறுப்பா இருக்கனுமா? 'தினமும்' காலைல இதை சாப்பிடுங்க
Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?