
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறீர்களா...? சந்தோஷமான செய்தி....
அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, சுமார் 4000 பணியிடங்களை நிரப்புவதற்காக 2015-ம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைப்பெற்றது.
இந்த தேர்வை எழுதுவதற்காக 8 லட்சத்திற்கு மேற்ப்பட்டோர் ஆர்வமுடன் விண்ணப்பித்து தேர்வினை எழுதினர். பின்னர் இவர்களுக்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடரப்பட்டது .
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , நேர்முகத்தேர்வு தேவை இல்லை எனவும், எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மற்றும் நேர்காணல் மதிப்பெண்ணை மொத்தமாக கணக்கிட்டு தேர்வு முடிவுகளை அறிவிக்கலாம் என 2015-ம் ஆண்டு ஆகட்ஸ் 7-ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்
இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்த, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என கவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த தேர்வை எழுதி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு மகிழ்வான செய்தியாக இருக்கும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.