
ஜல்லிக்கட்டுக்காக போராடிய தமிழக இளைஞர்களைய யாரும் மறக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. ராப்பகலாக போராடி வெற்றி கண்டனர் நம் தமிழ் மக்கள்.
இந்நிலையில் ஜல்லிகாட்டு என்றால் என்ன ..? காளைகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என அனைத்தையும் நம் மக்கள் அறிந்துள்ளனர். எனவே தற்போது மக்கள் மத்தியில் ஜல்லிகட்டுக்கு பெயர் போன காளைக்கு தனி மரியாதை மேலும் வலுத்துள்ளது.இதனை சாதகமாக பயன்படுத்தும் , நகை கடை உரிமையாளர்கள் , காளைகள் உருவம் பதிந்த மோதிரம் , செயின் என சுமார் 5௦ ஆயிரம் நகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பு :
இதற்கு முன்னதாக, குதிரை , மயில் , யானை உருவம் பதிந்த நகைகளை மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.தற்போதுதான் முதன் முறையாக காளை பதிந்த நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.