இந்த மாதம் எந்தெந்த காரியங்களை செய்தால் நன்மை பயக்கும் என்பதை பார்க்கலாம்...
மகம் ஜாதகத்தை ஆளும்
மக மாசத்தில் வரக்கூடிய பவர்ணமியானது, சிவசக்தி பவுர்ணமி
பதவி விரதம்
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து எதை நோக்கி நாம் செல்ல வேண்டுமோ அதனை நம் உள்நோக்கமாக வைத்துகொண்டு,மாசிமக பவுர்ணமியன்று வழிபட வேண்டுமாம்...
அது ஆரோக்கியம்,ஆனந்த, ஆன்மிகம்,ஐஸ்வர்யம்,குடும்ப ஒற்றுமையாக இருக்கலாம்..அல்லது தொழில் ரீதியாக இருக்கலாம் மனதை ஒருநிலை படுத்தி வழிபட வேண்டும்...
நமக்கு என்ன வேண்டுமோ,அதனை மனதில் நினைத்துக்கொண்டு,அதை பற்றிய சிந்தனையோடு, இன்றைய தினத்தில் வழிபட்டால்,நாம் நினைக்கும் அத்தனைக்கும் நமக்கு வந்து சேரும்.
இதே போன்று பொதுவாகவே,எந்த ஒரு மாதத்திலும் வரும் அம்மாவாசை மற்றும் பவுர்ணமியன்று எப்படி வழிபட வேணுமோ அதனை பின்பற்றுவது நல்லது.
அமாவாசை அன்று, காகத்திற்கு உணவளிப்பது.....வாசலில் கோலமிடாமல் இருக்க வேண்டும்...
உணவை தானம் வழங்குவது ....பிறருக்கு உதவி செய்வது என அனைத்து நல்ல செயல்களையும் செய்யலாம்.
இதே போன்று பவுர்ணமியன்று,கோவில் கிரிவலம் செல்வது ஆக சிறந்தது.
எனவே, மாசி மக பவர்ணமியன்று, தனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து, நமக்கு என்ன வேண்டுமோ அதனை நினைத்து வழிபட்டால் நம்மை வந்து சேரும்.