நம் வீட்டிலேயே ரெடியா இருக்கு "பேஸ் வாஷ்" ..! வெளியில் எங்கும் வாங்க வேண்டாம்..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 05, 2020, 04:02 PM IST
நம் வீட்டிலேயே ரெடியா இருக்கு "பேஸ் வாஷ்" ..! வெளியில் எங்கும் வாங்க வேண்டாம்..!

சுருக்கம்

20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 3 முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்... முகம் பொலிவு பெரும்.. எந்த பக்க விளைவுகளும் கிடையாது.  

நம் வீட்டிலேயே ரெடியா இருக்கு "பேஸ் வாஷ்" ..! வெளியில் எங்கும் வாங்க வேண்டாம்..!   

நம் முக அழகை பேணி காக்க எத்தனையோ முயற்சியை  மேற்கொள்வோம்.. ஆனால்  அதன் பக்க விளைவுகள் பற்றி சிந்திப்பதே கிடையாது. இது போன்று பல மெடிசின் மற்றும் கிரீம் பயன்படுத்துபவர்கள் இதற்காக மட்டும் தனி தொகையை ஒதுக்கி விடுகிறார்கள். ஒரு முறை பயன்படுத்த தொடங்கி விட்டால்... அதனை தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே முக அழகை பராமரிக்க முடியும். ஆனால் இதற்கெல்லாம்  மாற்று விதமாக இயற்கையாகவே வீட்டில் தயாரிக்கும் ஹெர்பல் பொடியை பயன்படுத்தினால் நம்முடைய முக அழகை பராமரிப்பது மட்டுமல்லாமல், எந்த கெடுதலும் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

முகத்தில் உள்ள கருமையை நீக்கி பொலிவு பெற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் செய்ய தேவையான பொருள்கள் 

அரிசி மாவு - அரை கப், பச்சை பயறு மாவு - அரை கப், கடலைமாவு - அரை கப், ஓட்ஸ் பவுடர் - அரை கப், இந்த 4 பொருட்களை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து வைத்து கொண்டு... தேவையான அளவு பவுடரை எடுத்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவவும் .இதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 

20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 3 முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்... முகம் பொலிவு பெரும்.. எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

எனவே மிக எளிதாக இருக்கக்கூடிய இந்த மெத்தட் மூலம் இனி முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்