Today astrology: செவ்வாய் - சனி கூட்டு, இந்த ராசிக்காரர்கள் அடுத்த 3 நாட்கள் ஜாக்கிரதை...இன்றைய ராசி பலன்!

Anija Kannan   | Asianet News
Published : Feb 24, 2022, 06:10 AM ISTUpdated : Feb 24, 2022, 06:12 AM IST
Today astrology: செவ்வாய் - சனி கூட்டு, இந்த ராசிக்காரர்கள் அடுத்த 3 நாட்கள் ஜாக்கிரதை...இன்றைய ராசி பலன்!

சுருக்கம்

Today astrology: ஜோதிடத்தில், சனி மற்றும் செவ்வாய் இணைவது அசுபமாகக் கருதப்படுகிறது, சனியின் இந்த சேர்க்கை மிகவும் கவலை அளிக்கிறது.

ஜோதிடத்தில், சனி மற்றும் செவ்வாய் இணைவது அசுபமாகக் கருதப்படுகிறது, சனியின் இந்த சேர்க்கை மிகவும் கவலை அளிக்கிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனியும் செவ்வாயும் பகையாளிகள். இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் சிக்கல்தான். ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவால்கள் நிறைந்தது ஆபத்தானதும் கூட. இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் பிரச்சினைதான்.

அதன்படி,கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், 2022 பிப்ரவரி 26-ம் தேதி சனியின் மகர ராசியில் நுழைய உள்ளது. செவ்வாய் தைரியம், வலிமை, நிலம் ஆகியவற்றின் காரக கிரகம் மற்றும் அவர்களின் மாற்றம் அனைத்து ராசி அறிகுறிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதில் சனியின் ராசியில் செவ்வாய் நுழைவது மிகவும் முக்கியமானது.

மகர ராசியில் ஏற்கனவே சனி இருக்கும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் நுழையப் போகிறது. ஜோதிடத்தில், சனி மற்றும் செவ்வாய் இணைவது அசுபமாகக் கருதப்படுகிறது, ஆனால் சனியின் ராசியில் இந்த சேர்க்கை இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளால் விபத்து, உயிர் இழப்பு, பேரிடர் போன்றவை ஏற்படும். எனவே, அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கடகம்: 

ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவானின் தலைகீழ் இயக்கத்தின் இந்த காலம் பிரச்சனைகளின் காலமாக இருக்கும். இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் ஈடுபடும் பல வேலைகள் கெட்டுப்போகலாம். பொருளாதார நிலையிலும் மாற்றம் ஏற்படலாம். வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 

விருச்சிகம்:

சனியின் தலைகீழ் இயக்க காலம், விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இக்கட்டான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் துன்பம் அதிகரிக்கக்கூடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி எப்போதெல்லாம் தலைகீழ் இயக்கதில் உள்ளதோ, அப்போதெல்லாம் ஜென்ம சனியால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்கள் அதிகரிக்கும். எனவே, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எதிரிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடும். பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மகரம்: 

சனி சஞ்சரிக்கும் நேரத்தில், மகர ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் கூடும். அதன் தாக்கத்தை மகர ராசிக்காரர்கள் தொழிலில் காணலாம். உத்தியோகத்தில் தடைகள் வரக்கூடும். முதலாளியுடனான உறவுகள் மோசமடையக்கூடும். இந்த நேரத்தில், மகர ராசிக்காரர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், பண பரிவர்த்தனையிலும் இந்த மக்கள் கவனமாக இருக்க வெண்டும். 

கும்பம்: 

ஏப்ரல் 29 முதல் சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவார். இதற்குப் பிறகு, இந்த ராசியில் சனி பகவானின் தலைகீழ் இயக்கமும் இருக்கும். அதனால், இந்த ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த கால கட்டத்தில். எந்த விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். இல்லையெனில் நீங்கள் சில பெரிய பிரச்சனைகளில் சிக்கலாம். கும்ப ராசிக்கார்ரகள் தங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சனியின் இந்த இயக்கத்தின் போது புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவது நல்லது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

படையெடுக்கும் கொசுக்களை விரட்டும் அற்புத செடிகள்
வீட்டுக்குள் அமைதியை கொண்டு வரும் செடிகள்