ஏடிஎம் இல் பணம் எடுக்க ஆதார் அட்டை .....!!! அடுத்தகட்ட அசத்தல் நகர்வு...!!!

 
Published : Nov 29, 2016, 07:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
ஏடிஎம்  இல் பணம் எடுக்க ஆதார் அட்டை .....!!!  அடுத்தகட்ட அசத்தல் நகர்வு...!!!

சுருக்கம்

“ஏடிஎம்“ இல் பணம் எடுக்க ஆதார் அட்டை மட்டும் போதும்..!!! அடுத்தகட்ட அசத்தல் நகர்வு...!!!

நம்மில்   எத்தனை பேருக்கு தெரியும்,  ஆதார்  கார்டை  பயன்படுத்தி , ஏ டி எம்  இல் பணம்  எடுக்க  முடியும்  என்று ....?

மகாராஷ்டிர  மாநிலத்தை  தலைமையிடமாக  கொண்டு செயல்படும் , DCB (Development Co-operative Bank}, இந்த  புது திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்த  திட்டம்  ஆரம்பத்தில்,   ஏப்ரல் 2016 இல், மும்பையில்  ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து , மக்களிடையே  எதிர்பார்த்த அளவிற்கு விழிப்புணர்வு  இல்லாததால்,  DCB (Development Co-operative Bank)  வங்கியின்   வாடிக்கையாளர்கள்   மட்டுமே  பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில்,  கடந்த ஜூன்  மாதம் , பெங்களூருவில்  தங்கள்  சேவையை தொடங்கியது இந்த வங்கி.....

ஆதார்  அட்டையை  பயன்படுத்தி பணம்  எடுப்பது  எப்படி ?

  1. முதலில்  12  டிஜிட்  ஆதார்   எண்ணை , வங்கி கணக்கில் இணைக்க  வேண்டும்
  2. பின்னர் ஏ டி எம் மிஷினில் பணம்  எடுக்கும்  போது,  மிஷினில் உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி,    12  டிஜிட்  ஆதார்   எண்ணை பதிவிட வேண்டும்.
  3. பின்னர், பையோ மெட்ரிக்   விவரத்தை  கொடுக்கவும். அதாவது, நம்முடைய  கைரேகை  அல்லது  கருவிழியை  பதிவு  செய்யவும்.
  4. ஆதார்  அட்டை  மூலம் கைரேகை  கருவிழி  பயன்படுத்தி பணம்  எடுக்கும் போது,  நமக்கு   ஏ டி எம்  கார்ட்  தேவைப்படாது . அதே சமயத்தில்,  சீக்ரெட்   எண்ணும் பதிவிட வேண்டாம்.....

 இதனால் பலன்  என்ன ...?

  1. எப்பொழுதும்  நம் கையில்  கார்ட்  வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
  2. ஏ டி எம்  காரட் தொலைந்தால், ஆதார்  எண்ணை வைத்து,  ஏ டி  எம்  சென்டரிலேயே  பிளாக்  செய்யலாம்.
  3. நம் ஆதார் எண்ணை பயன்படுத்தி , பணம் எடுப்பதில் முறைகேடு  நிகழாது.

 

 கருப்பு  பண   ஒழிப்பில்   தீவிரமாக  இறங்கியுள்ள  இந்தியா, இன்னும்  சில  மாதங்களிலேயே நினைத்து கூட   பார்க்க முடியாத  அளவுக்கு முனேற்ற பாதையில் செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை...

 இந்நிலையில், DCB (Development Co-operative Bank)   வங்கியானது, அடுத்து வரும் 6 மாதத்தில்,  இந்தியா முழுக்க  உள்ள  சுமார் நானூறு  ஏ டி எம்   மையங்களில்  இந்த  சேவையை  செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்