இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 1, 2021, 2:50 PM IST
Highlights

வருகிற 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகிற 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்’’என தெரிவித்துள்ளது.

click me!