தொடரும் பேய் மழை..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Published : Aug 10, 2019, 12:32 PM IST
தொடரும் பேய் மழை..! எச்சரிக்கை  விடுத்த  வானிலை ஆய்வு மையம்..!

சுருக்கம்

வங்க கடலில் இருந்த காலத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி குஜராத் அருகே சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக மலையோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

தொடரும் பேய் மழை..! எச்சரிக்கை  விடுத்த  வானிலை ஆய்வு மையம்..! 

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் இருந்த காலத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி குஜராத் அருகே சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக மலையோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

அதன் படி, கோவை தேனி நெல்லை கன்னியாகுமரி நீலகிரியில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மீன் பிடித்த கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை