5 ஆம் தேதி வரை தமிழகத்தில் நல்ல மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 01, 2020, 07:13 PM IST
5 ஆம் தேதி வரை தமிழகத்தில் நல்ல மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சுருக்கம்

வளிமண்டலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் இடமாக தமிழகம் இருப்பதால் வருகிற ஐந்தாம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆம் தேதி வரை தமிழகத்தில் நல்ல மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..! 

தமிழகத்தில் வரும் 5ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் செம்மஞ்சேரியில் 4 சென்டி மீட்டர் மழையும் கொளப்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் மீனம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் செங்கற்பட்டில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

வளிமண்டலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் இடமாக தமிழகம் இருப்பதால் வருகிற ஐந்தாம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகம் முழுவதும் மிதமான வெப்ப நிலையே காணப்பட்டது. குறிப்பாக சென்னையை பொருத்தவரையில் அவ்வப்போது லேசான மழை மற்றும் நேற்று இரவு  நல்ல மழையும் பெய்தது. எனவே 2020 புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்