இன்னும் 5 நாட்களை தான்...! எப்படி மழை வருதுன்னு பாருங்க..!

Published : Dec 04, 2019, 07:29 PM IST
இன்னும் 5 நாட்களை தான்...! எப்படி மழை வருதுன்னு பாருங்க..!

சுருக்கம்

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், பாபநாசத்தில் அதிக பட்சமாக 5 செ.மீட்டர் மழையும், செந்துறை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீட்டரும்மழையும் பதிவாகி உள்ளது. 

இன்னும் 5 நாட்களை தான்...! எப்படி மழை வருதுன்னு பாருங்க..! 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மழை வர வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், பாபநாசத்தில் அதிக பட்சமாக 5 செ.மீட்டர் மழையும், செந்துறை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீட்டரும்மழையும் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் மழை பொழிவு இருக்குமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும் இரண்டு நாட்களுக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைந்து ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் மழை பெய்ய தொடங்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.   

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

LPG Saving Tips: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? பாதி கேஸில் சமைக்கலாம்! இதோ 8 சூப்பர் டிப்ஸ்
Summer Foods: வெயில் சுட்டெரிக்குதா? உடம்பை கூல் ஆக்க இந்த உணவுகள் போதும்!