சரசரவென உயர்ந்த தங்கம் விலை! இப்போது விலை குறைய வாய்ப்பே இல்லையா?

By ezhil mozhiFirst Published Mar 10, 2020, 11:43 AM IST
Highlights

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மனதை நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால்  தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர காரணம் என  வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். 

சரசரவென உயர்ந்த தங்கம் விலை! இப்போது விலை குறைய வாய்ப்பே இல்லையா? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து உள்ளது. தங்கத்தின் மீதான விலை சற்று குறையும் என எதிர்பார்க்கும் தருணத்தில், மீண்டும் உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.35 உயர்ந்து 4216 ரூபாய்க்கும், சவரனுக்கு 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது.  

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மனதை நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால்  தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர காரணம் என  வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். 

click me!