
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை...!
தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலையில் இன்று மீண்டும் உயர்வு கண்டு உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 30 ஆயிரத்தை நெருங்கும் நிலை உருவாகி உள்ளது.
தங்கத்தின் மீதான இறக்குமதி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கபட்டதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாகவே தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து உள்ளது.
அதன் படி
ஒரு கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து தங்கம் ரூ. 3691.00 ரூபாயாகவும், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையானது
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 40 பைசா குறைந்து 51.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது..
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.