சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! தீபாவளியன்று சவரன் ரூ.30 ஆயிரம் தானோ..?

Published : Oct 25, 2019, 05:41 PM IST
சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! தீபாவளியன்று சவரன் ரூ.30 ஆயிரம் தானோ..?

சுருக்கம்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. 

சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! தீபாவளியன்று சவரன் ரூ.30 ஆயிரம் தானோ..?

சவரன் விலை தொடர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து உள்ளது 

அதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.24 அதிகரித்து சவரனுக்கு ரூ. 192 அதிகரித்து, 29 ஆயிரத்து 496 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.6 உயர்ந்து சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தும் 29 ஆயிரத்து 544 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது. ஆக இன்று  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து  விற்பனையாகி வருகிறது

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 70 பைசா அதிகரித்து வெள்ளி 50.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்