மாலை நேரத்தில் உயர்வு கண்டது தங்கம் விலை...!

Published : Nov 22, 2019, 05:27 PM IST
மாலை நேரத்தில் உயர்வு கண்டது தங்கம் விலை...!

சுருக்கம்

மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 9 அதிகரித்து 3646.00 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 168 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த  நிலையில் மாலை நேரத்தில் கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து உள்ளது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.  

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 31ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 3637 ரூபாயாகவும்,சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 96 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 

மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 9 அதிகரித்து 3646.00 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 168 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...! 

கிராமுக்கு 30 பைசா அதிகரித்து வெள்ளி 48.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்