சரசரவென மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..! மாலை நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்..!

By ezhil mozhiFirst Published Dec 17, 2019, 5:21 PM IST
Highlights

கிராமுக்கு ரூ.10 பைசா குறைந்து 47.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் 29 ஆயிரத்தை எட்டி உள்ளது.

சரசரவென மீண்டும் உயர்ந்த தங்கம்  விலை..!  மாலை நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்..! 

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 உயர்ந்து உள்ளது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3625 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது. 

மாலை நேர  நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, 3627.00 ரூபாயாகவும், சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு ரூ.10 பைசா குறைந்து 47.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் 29 ஆயிரத்தை எட்டி உள்ளது. இதன் மூலம் சவரன் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்துகிறது. மேலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தங்கம் வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில், எவ்வளவு தான் விலை உயர்ந்தாலும் தங்கம் வாங்குவதை நிறுத்த முடிவதில்லை.

click me!