மனம் நொந்து போன மக்கள்..! தங்கம் இவ்வளவு தான் விலை குறைவா...?

thenmozhi g   | Asianet News
Published : Feb 10, 2020, 12:24 PM IST
மனம் நொந்து போன மக்கள்..! தங்கம் இவ்வளவு தான் விலை குறைவா...?

சுருக்கம்

தற்போதைய நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக எப்போது தான் சவரன் விலை குறையுமோ என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

மனம் நொந்து போன மக்கள்..! தங்கம் இவ்வளவு தான் விலை குறைவா...?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, பெரும் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.13 குறைந்து 3885.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய்  குறைந்து 31 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி ரி அதிகரித்த உடன் சவரன் விலை மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது. 

மேலும் தற்போதைய  நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக எப்போது தான் சவரன் விலை குறையுமோ என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. 

மேலும் வருகிற மாதங்களில் சுப  காரியங்கள் அதிகம் நடக்க உள்ளதால், தங்கத்தின் தேவை தவிர்க்க முடியாததாக கருதப்படுகிறது. எனவே  மக்களின் தேவையை பொறுத்து தங்கம் விலை மீண்டும் உயர் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது . 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 49.90  ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்