உர்ர்ர் என இருந்தால் ஆடுகளுக்கு கூட பிடிக்காதாம்; சிரித்த முகத்துடன் இருந்தால் தான் கிட்டேயே வருமாம்;

Published : Aug 30, 2018, 06:49 PM ISTUpdated : Sep 09, 2018, 07:23 PM IST
உர்ர்ர் என இருந்தால் ஆடுகளுக்கு கூட பிடிக்காதாம்; சிரித்த முகத்துடன் இருந்தால் தான் கிட்டேயே வருமாம்;

சுருக்கம்

பொதுவாகவே எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எளிதில் பிடித்துவிடும். சிடுசிடுவென இருப்பவர்களிடம் பேச யாரென்றாலும் கொஞ்சம் தயங்க தான் செய்வார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் கூட பொருந்துமாம். அதிலும் குறிப்பாக ஆடுகளுக்கு. சமீபத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஒரு ஆய்வின் முடிவு தான் இப்படி தெரிவித்திருக்கிறது.  

பொதுவாகவே எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எளிதில் பிடித்துவிடும். சிடுசிடுவென இருப்பவர்களிடம் பேச யாரென்றாலும் கொஞ்சம் தயங்க தான் செய்வார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் கூட பொருந்துமாம். அதிலும் குறிப்பாக ஆடுகளுக்கு. சமீபத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஒரு ஆய்வின் முடிவு தான் இப்படி தெரிவித்திருக்கிறது.

ஆடுகள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நபர்களை தான் அதிகம் விரும்புகின்றனவாம். ஆடுகளுக்கு எப்படி தெரியும் மனிதர்கள் சிரிக்கின்றனரா? இல்லை கோபமாக இருக்கின்றனரா? என்று என நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால் இந்த கேள்விக்கு விடையளிக்கிறது ராயல் சொசைட்டி எனும் நிருவனம் நடத்தி இருக்கும் இந்த ஆராய்சி.


முதலில் இந்த ஆராய்சிக்காக ஒரு ஆட்டு மந்தையில் இருந்து 35 ஆடுகளை தெரிவு செய்திருக்கின்றனர் ஆராய்சியாளர்கள். அதன் பிறகு அந்த ஆடுகளை எல்லாம் ஒரு அறைக்குள் அனுப்பி இருக்கின்றனர். அந்த அறையில் மனிதர்களின் கோபமான மற்றும் சந்தோஷமான முக பாவங்கள் கொண்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களின் அருகில் தான் அனைத்து ஆடுகளும் சென்று நின்றிருக்கின்றன. இதே ஆராய்ச்சியை இன்னொரு விதமாகவும் முயற்சித்து பார்த்திருக்கின்றனர். அதில் ஒரே நபரின் கோபமான மற்றும்ன் சந்தோஷமான முக பாவங்கள் அடங்கிய புகைப்படங்களை அந்த அறையில் வைத்திருக்கின்றனர் அப்போதும் அந்த ஆடுகள் , சிரித்த முகம் உள்ள நபரையே தேர்வு செய்திருக்கின்றன.


இதனால் ஆடுகள் கூட புன்னகையுடன் , மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் மனிதரையே தேர்வு செய்கின்றன என தெரியவந்திருக்கிறது. ஆடுகளே இவ்வளவு தூரம் யோசிக்கிறது என்றால் மனிதர்கள் எப்படி எல்லாம் யோசிப்பார்கள். மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் நமக்காகவாவது நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது, அவசியம் தானே.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Hair Growth Foods: முடி ரொம்ப கொட்டுதா? அடர்த்தியா முடி வளர இந்த 11 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.!
Tulsi Planter Designs: வீட்டுக்கு அழகு சேர்க்கும் துளசி மாடம்... இந்த 4 டிசைன்ஸ் சூப்பரா இருக்கும்!