நம் முன்னோர்கள் உணவே மருந்து என சொல்வதை கேட்டிருப்போம். நாம் உண்ணும் உணவே நமக்கு பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது என்பதை நன்கு அறிவோம்.
நம் முன்னோர்கள் உணவே மருந்து என சொல்வதை கேட்டிருப்போம். நாம் உண்ணும் உணவே நமக்கு பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது என்பதை நன்கு அறிவோம்.
இருந்தபோதிலும் தற்போது சின்ன காய்ச்சல் வந்தாலும் மருத்துவமனைக்கு செல்கிறோம். ஆனால் மிகப்பெரிய கொடுமையான நோயான கேன்சர் அதாவது புற்று நோய்க்கு மருந்து நாம் உண்ணும் உணவிலேயே உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம். தினமும் நாம் சமைக்கும் போது சேர்த்துக்கொள்ளும் பூண்டு தான் அது. பூண்டை தனியாக சாப்பிட யாருக்கும் பிடிக்காது. ஆனால் முடிந்தவரை நாம் சமைக்கும்போது சேர்த்துக்கொள்வது நல்லது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பூண்டின் முழு சக்தியையும் பெற்றுக்கொள்ள அதனை தேனுடன் கலந்து எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. பூண்டு பற்களை எடுத்து ஒரு சிறிய பாட்டிலில் தேனை நிரப்பி அதில் இந்த துண்டுகளை போட்டு வைக்கவும். ஒரு வாரம் ஊற வைத்த பின்பு தினமும் 2 பூண்டுபற்களை சாப்பிட்டு வந்தாலே போதும், நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதனை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. இந்த பூண்டானது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்தத்திலுள்ள வகை செல்களை அதிக ஆற்றலுடன் எப்போதும் வைத்துக்கொள்ளும் சக்தி உடையது.எனவே புற்று நோய் நம்மை அண்டாது.
உலகப் புகழ் புளோரிடா பல்கலைக்கழகம் இதனை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டதில் பூண்டின் மகத்துவத்தை கொண்டு பெரும் ஆச்சரியம் கொண்டுள்ளது.